Posts

Showing posts from January, 2018

தமிழர் பண்பாடு

நடிப்புக் கலைகள் தமிழ் இசை நடிப்புக் கலைகள் பற்றி, “இனி  என்ன செய்ய வேண்டும்?” என்ற தலைப்பில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சேலம் சென்டிரல் தியேட்டரில் ‘இன்ப இரவு’ என்னும் நாடகத்திலும், சென்னை மாவட்ட நீதிக்கட்சி மாநாட்டிலும், திருச்சி பொதுக்கூட்டத்திலும் பிப்ரவரித் திங்களில் 7, 9, 13, 20 ஆகிய நான்கு நாள்களில்  நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பு: தமிழ் இசைக்குக் கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள். பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும் செல்வவான்களும், நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும்வரை இந்த உணர்ச்சி வலுத்துக்கொண்டே போகும். இனி என்ன செய்யவேண்டும்? “தமிழ் இசை நமது நல்வாழ்வுக்குப் பயன்படும்படிச் செய்ய வேண்டியது நமது கடமை. இன்று இதுவரை தமிழல்லாத வேறு மொழியில் இருந்த இசை (பாட்டுகள்) தமிழில் பாடவேண்டியதாக ஏற்பட்டதற்குக் காரணம் நமக்கு ...

பார்ப்பான் ஒழிந்தால்தான் கம்யூனிசம் வளரும்

நான் ஒன்றும் கம்யூனிசத்திற்கோ, சோஷலிசத்திற்கோ விரோதியன்று, மற்றவர்களை விடக் கம்யூனிசத்திலும், சோஷியலிசத்திலும் எனக்கு மிகுந்த பற்றும் ஆர்வமும் உண்டு. ஆனால் கம்யூனிசமும், சோஷலிசமும் இந்த நாட்டிற்கு ஏற்றமுறையில் அமைக்கப்பட வேண்டும். கம்யூனிசத்திற்கும், சோஷலிசத்திற்கும் நேர் எதிரியாக அதாவது அபேதவாதத்திற்கு எதிராகப் பேதம் வளர்க்கும் பெரும் ஆட்களாய் இருக்கிற பார்ப்பனர்கள், பார்ப்பனத் தன்மைகள் ஒழிகின்ற வரையிலே இந்நாட்டில் கம்யூனிசமோ, சோஷலிசமோ ஏற்பட முடியாது. அதற்குப் பதிலாக ‘பிராமணீயம்’தான் வலுவாக ஏற்படும் என்ற கருத்துடையவன்.                                      -  (25-5-1974 “விடுதலை”) நூல் :  தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு ஆசிரியர் :  தந்தை பெரியார்

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் தலைப்பில் 1939-இல் ‘விடுதலை’யில் வெளியான தலையங்கங்கள்

தமிழ்நாடு தமிழருக்கே என்று இப்போது நடைபெற்று வரும் பிரசாரத்தைப்பற்றித் தமிழ்நாட்டில் எங்கும் பேசப்பட்டு வருகிறது. நம் எதிரிகளும், தங்கள் சுயநலத்திற்கு ஆகவே நம் வட்டத்தில் இருக்கும் சில வேஷதாரிகளும் இதைத் திரித்துக் கூறுவதும், இதைப்பற்றி விஷமப் பிரசாரம் செய்வதும், இதற்கு எதிரான ஒரு கிளர்ச்சியை உண்டாக்கச் சூழ்ச்சி செய்வதுமான காரியங்களைப்பற்றி நாம் கேள்விப்படுவதோடு, சில விஷயங்களை நேரிலும் பார்க்கிறோம். இது விஷயமாய்ப் பெரியார் தூத்துக்குடியில் பேசிய பேச்சை வைத்து மெயில் பத்திரிகை எழுதிய ஒரு கண்டனத்திற்குப் பெரியார் சென்னை மெமோரியல் ஆலில் சொன்ன சமாதானம் சமீபத்தில் நம் பத்திரிகையில் வரக்கூடும். ஆனாலும் மெயில் பத்திரிகைக்குப் பெரியார் எழுதி அனுப்பிய விளக்கம் 20-ஆம் தேதி மெயிலில் பிரசுரிக்கப்பட்டிருப்பதுடன், அதன் தமிழ்க் கருத்து பின்னால் அநுபந்தமாய்ப் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், இனி அப்பிரசாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டியிருக்கிறபடியால், அதைப் பற்றிய விளக்கத்தை தொடர்ந்து தலையங்கமாக எழுதுகிறோம். குறிச்சொல் தோற்றம் தமிழ்நாடு தமிழருக்கே என்ற அபிப்பிராயம...