Posts

Showing posts from September, 2017

வள்ளல் பெரியார்!

பெரும் செல்வந்தர் வீட்டில் பிறந்த பெரியார் மிக எளிமையாகவே வாழ்ந்தார்கள் ! பொதுவாழ்வில் ஈடுபட்டதும் அவரது ஆடம்பரங்கள் எல்லாம் ஓடி மறைந்தன ! குடும்ப ரீதியாக அவருக்கு வந்து சேர்ந்த சொத்துகள் , பொது வாழ்வில் அவருக்கு அளிக்கப்பட்ட அன்பளிப்புகள் அத்தனையையும் பெரியார் தனக்குப் பின் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வைத்துச் செல்லவில்லை . பொதுத் தொண்டுக்கு அவை பயன்பட வேண்டும் என்கிற கருத்தோடு அறக்கட்டளையை நிறுவிச் சென்றார்கள் . அந்த அறக்கட்டளை ஆற்றவேண்டிய பணியையும் நெறிப்படுத்திச் சென்றுள்ளார்கள் . பெரியார் காலத்திலும் அவர்களுக்கு பிறகு அன்னை மணியம்மையார் காலத்திலும் தொடர்ந்து பொறுப்பேற்றுள்ள மானமிகு கி . வீரமணி அவர்களின் காலத்திலும் , அறக்கட்டளையின் சார்பில் தமிழகத்தில் இயங்கி , விரிவாகி நடைபெற்றுவரும் கீழ்க்கண்ட நிறுவனங்களைக் கவனித்தால் தந்தை பெரியாரின் வள்ளல் தன்மை என்ன என்பது விளங்கும் .                 பெரியார் - மணியம்மை ...

நுழைவுத் தேர்வு குறித்த சில விளக்கங்கள்

1. நுழைவுத் தேர்வினால் யாருக்கு பாதிப்பு ? கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கிறது இந்த நுழைவுத் தேர்வு !  நகர்ப் புற பள்ளிகள் மற்றும் கிராமப்புற பள்ளிகளின் தரமும் , கட்டமைப்பும் சமாக இல்லாத நிலையில் , அனைவருக்கும் பொதுவான நுழைவுத்தேர்வு என்பது எப்படிச் சரியாகும் ? நியாயமாகும் ? பெருநகரங்களில் , நகர்புறங்களில் உள்ள பள்ளிகள் , அவற்றில் உள்ள வசதிகள் , கிராமப்புறப் பள்ளிகளில் உண்டா ? அங்கு போதிய ஆசிரியர்கள் , கரும்பலகைக் கூட இல்லாத நிலை உண்டே ! இந்த ஏற்றத் தாழ்வைச் சமன்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் முயற்சிகள் என்ன ? சமநிலை உருவாக்கிய பின் அல்லவா பொது நுழைவுத் தேர்வை பற்றிச் சிந்திக்க வேண்டும் . மக்களில் வருணபேதம் உள்ளதுபோல் நகர , கிராம பேதங்களும் உண்டு .  கிராமம் என்றால் அதற்குப் பட்டிக்காடு என்று பெயர் கொடுத்துள்ளனர் .  அங்கு சாலை இல்லை , விளக்கு வெளிச்சம் இல்லை , மருத்துவமனை இல்லை , நூலகம் இல்லை என்று இல்லை போன்ற அவலநிலை தானே உள்ளது .  நகரம் என்பது இதற்கு நேர்மாறானதாக...